Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

நீ இப்பொழுது இறங்கும் ஆறு
-5 %
ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன...
₹261 ₹275
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
-5 %
இன்றைக்கு எண்பதாண்டுகளுக்கு முன்பு, நிலவுடைமை அமைப்பு வலுவாகக் கோலோச்சியிருந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நீடாமங்கலத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது ஏற்பாடு செய்திருந்த சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டதற்காகத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இருபதுபேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எந..
₹181 ₹190
நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம்
-5 %
இந்த நூலைத் தன்வரலாறு அல்லது நினைவுக்குறிப்பு என்று சொல்வதைவிட, ஒரு பெண் தனது அடையாளத்தையும் சமூகத்தில் தனக்கான இடத்தையும் கோருவதற்கான போராட்டத்தின் தீவிரமான, உணர்வுபூர்வமான விவரிப்பு என்று கொள்ளலாம். இந்த நூலின் வழியாக, திருநர் உரிமை ஆர்வலர், போராளி, சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், நடிகர் அக்கை ப..
₹361 ₹380
நீதி மறுக்கப்பட்ட கதை
-5 % Out Of Stock
உலகப் புகபெற்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களுள் ஒன்றான வேலூரிலுள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்ற டாக்டர் பினாயக் சென் தனது வாழ்க்கையை, தனது மருத்துவ அறிவை சத்தீஸ்கர் பழங்குடி மக்களுக்காக அர்பணித்தவர். தனது வாழ்க்கையை தியாகம் செய்ததாக அவர் ஒருபோதும் கருதியதில்லை. மனிதர்களின் உடல் நலமும்..
₹214 ₹225
நீராட்டும் ஆறாட்டும்
Out Of Stock
"மரபும் புதுமையும்", "மஞ்சள் மகிமை" ஆகிய இரு சிறு நூல்களின் தொகுப்பு இந்நூல்...
₹75
நீராம்பல்
-5 %
முகமும் பெயரும் அடையாளமும் அறியாமல் கங்காவின் கவிதைகளை முதலில் வாசித்தேன். சிங்கப்பூர் தங்க முனை விருதிற்குரிய போட்டியில் வாசிக்கக் கிட்டியவை கங்காவின் கவிதைகள். சொற்செட்டும் புதிய படிமங்களும் புலம்பெயர்ந்தாலும் புலத்திலிருந்து இடையறாமல் தவிக்கச் செய்கின்ற நுண்ணுணர்வும் மாறிமாறி நெய்கிற கவிதைகள் அவ..
₹95 ₹100
நீரின்றி அமையாது உலகு
-5 % Out Of Stock
பஞ்ச பூதங்களாலான மனித உடல் சமூகப் பண்பாட்டுக் காரணகாரிய மதிப்பீடுகளை வழிநடத்தும், செயல்படுத்தும், கடத்தும் ஊடகமாக மாறியிருக்கிறது. இவற்றின் வன்முறைகளிலிருந்து எளிய மனித உடலை மீட்டு அதன் இயற்கை விதிகளுக்கு ஆட்பட்ட பேரியக்கத்தில் ஒன்றவிடும் எத்தனிப்பாக இத்தொகுப்பின் கவிதையியல் கட்டமைகிறது...
₹67 ₹70
நீர் பிறக்குமுன்
-5 % Out Of Stock
ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக இருந்த இந்திரா, தனது பகுதியிலுள்ள தலித் மக்களின் பதினைந்தாண்டு காலக் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மேற்கொண்ட நேர்மையான, சாத்வீகமான தொடர் போராட்டத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் நூல். அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தனது உறவினர்களின் நேரடியான, மறைமுக..
₹57 ₹60
நீர் வளர் ஆம்பல்
-5 %
அவித்த உருளைக் கிழங்கின் வாசனையுடன் பெய்யும் பெரு மழையிடம் ஒதுக்குப்புறமான எனது இருப்பிடத்தை நீ எப்படி அறிந்தாய் என உசாவும் இந்தக் கவிதைகள் தனது சின்னஞ்சிறு கைகளால் யாதொரு பேதமுமின்றி உலகத்தைத் தழுவிக்கொள்ளும் வாஞ்சை கொண்டவை. நிலத்தின் பண்பாட்டுத் தளங்களை அதிகாரத்துக்கெதிரான ஆடுகளமாக்கச் சித்தங் கொண..
₹133 ₹140
நீர் விளையாட்டு
-5 % Out Of Stock
வாழ்வின் பல்வேறு அடுக்குகளிலும் தான் எதிர்கொண்ட அனுபவங்களைச் சிடுக்குகளற்ற கதைகளாக்கியுள்ளார் பெருமாள்முருகன். தமிழ்க் கதையுலகம் இதுவரை தொடத்தயங்கிய சில கூறுகளை அனாயசமாகக் கையாண்டு, தமிழ் இலக்கியத்தின் எல்லையைத் தன்னளவில் விரிவுபடுத்தும் பெருமாள்முருகன், சொற்களை மீறிய மனித மனோபாவங்களை வாசகர்களு..
₹119 ₹125
நீர்ச்சறுக்கல்
-5 %
அறிந்ததின்மீது அதிருப்தி இருந்தாலும் அறியாததின் மீதுள்ள பயத்தால் அறிந்ததை இறுகப் பற்றிக்கொள்ளும் தன்மை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் உணரக் கிடைக்கிறது. இனம்புரியாத அவஸ்தையின் நீட்சி என்றும் இந்தக் கவிதைகளைச் சொல்லலாம். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முதல் தொகுப்புக்கான சலுகையைக் கோராதவை...
₹57 ₹60
நீர்மாலை
-5 %
ஒரு ஐம்பது சொற்கூட்டங்கள் சேர்ந்து உண்டாக்கக்கூடிய உணர்ச்சியை, சுயம்புலிங்கத்தின் ஒரு சொல் உருவாக்கிவிடுகிறது. முன்னூற்றிச் சொச்சம் சொற்களுக்குள் ஒரு திடகாத்திரமான கதையை அவரால் படைத்துவிடவும் முடிகிறது. தவலைப் பானையின் குடிநீரைப் போல அந்தக் கதையின் ஒரு சொல்கூடத் தழும்பிச் சிதறுவதில்லை. வர்க்கப..
₹119 ₹125
Showing 889 to 900 of 1346 (113 Pages)